Showing posts with label More. Show all posts
Showing posts with label More. Show all posts

Monday, August 5, 2019

உறவுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு நாம் தெரிந்து கொள்ளவேண்டியது

உறவுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு நாம் தெரிந்து கொள்ளவேண்டியது

😊😃😄

பேசி தீருங்கள், பேசியே வளர்க்காதீர்கள்
உரியவரிடம் சொல்லுங்கள், ஊரெல்லாம் சொல்லாதீர்கள்
நடப்பதை பாருங்கள், நடந்ததை கிளறாதீர்கள்
உறுதி காட்டுங்கள், பிடிவாதம் செய்யாதீர்கள்
விவரங்கள் சொல்லுங்கள், வீண் வார்த்தையை தவிருங்கள்
தீர்வை விரும்புங்கள், தர்க்கம்  செய்யாதீர்கள்
விவாதம் செய்யுங்கள் , விவகாரம் செய்யாதீர்கள்
விளக்கம் பெறுங்கள், வீண் விரோதம் காட்டாதீர்கள்
பரிசீலனை செய்யுங்கள் , பணிந்து போகாதீர்கள்
சங்கடமாய் இருந்தாலும் , சத்தியமே கூறுங்கள்
செல்வாக்கு இருந்தாலும் , சரியானதை சொல்லுங்கள்
எதிர் தரப்பும் பேசட்டும் , என்னவென்று கேளுங்கள்
கூடிய சீக்கிரமேதீர்வு வரும் பாருங்கள் ,
நேரம் வீணாக்காமல் விரைவில் முடியுங்கள் ,
அதுவாக முடியும் என்றால் வேறு வேலை செய்யுங்கள் ,
யாரோடும் பகை இல்லை என்பது போல் வாழுங்கள் !!!!!
                                  வாழ்க வளமுடன் !!!

Read More »

Sunday, December 9, 2018

பிள்ளையார் நோன்பு தோன்றிய கதை

நகரத்தார் கொண்டாடும் பிள்ளையார் நோன்பு 

Pillaiyar, Vinayagar, Festival, Vinayagar Chathurthi, Ganesh, Lord story,

கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையில் இருந்து 21 நாள் விரதமிருந்து.
21ம் நாள் சஷ்டியும் , சதயமும் ஒன்று கூடும் அன்று ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் நோன்பு கொண்டப்படுகிறது .  இது ஒவ்வொரு நகரத்தார் இல்லங்களிலும் சிறப்பாக கொண்டப்படுகிறது . வெளிநாடுகளில் உள்ள நகரத்தாரும் சிறப்பாக கொண்டடுவார்கள் .

பிள்ளையார் நோன்புக்கு முதல் நாளில் ஆலங்காய் எடுப்பதற்கு மாவு தயார் செய்து வைப்பார்கள் . கருப்பட்டி பணியாரத்திற்கும் மாவு தயார் செய்து வைப்பார்கள் .

பிள்ளையார் நோன்பு அன்று விசேஷமாக பலகாரங்கள் செய்வார்கள். அவை
1. ஆலங்காய் - 21
2. கருப்பட்டி பணியாரம்  - 21
3. வெள்ளை பணியாரம்
4. உளுந்த வடை
5. பாசிப்பயறு சுண்டல்
ஆகிய பலகாரங்கள் செய்வார்கள்.

நோன்புக்காக
1. நெல்லுப் பொரி
2. எள்ளுப்பொரி
3. கம்புப் பொரி
4. சோளப் பொரி
5. அவல் பொரி
ஆகியவற்றை நோன்புக்காக பொரித்து வைத்து சாமி கும்பிடுவார்கள் .

இதன் விசேஷம் என்னவென்றால் 21 நாள் விரதமிருந்து . பிள்ளையார் நோன்பிற்கு பலகாரங்கள் செய்து விசேஷமாக கொண்டாடுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.இந்த ஆலங்காய் தான் பிள்ளையார் நோன்பின் விசேஷம்.

கொண்டாடும் முறை

நோன்பு அன்று பூஜை அறையில் நடுவீட்டு கோலம் போட்டு , விளக்கேற்றி , தேங்காய் , பழம் மற்றும்  கண்ணுப்பிள்ளை பூ  வையும்  , ஆவாரம் பூ வைத்து இணைத்து கட்டுவார்கள் . பிறகு புது துண்டு அல்லது வேஷ்டியிலிருந்து 21 நூல் எடுத்து வைத்து கொள்வார்கள். அதை ஆலங்காயில் வைத்து நெய் தடவி அதில் விளக்கேற்றி அதை வீட்டில் உள்ள பெரியவர் கிழக்கு பார்த்து அமர்ந்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுப்பார்கள் . அனைவரும் பெரியவர்களை வணங்கி பெற்று சாப்பிடவேண்டும் . இதற்கு " இலை எடுத்தல் " என்று பெயர் . இதுவே இந்த நோன்பின் சிறப்பாகும் . அந்தக்காலம் முதல் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது .

வீட்டில் செய்ய முடியாதவர்கள் செட்டிநாட்டு நகரமடத்தில் ( நகரவிடுதி) இலை எடுத்து கொள்வது இன்றும் வழக்கமாக உள்ளது .

சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி?
நவராத்திரி பண்டிகையின் சிறப்பு






Read More »

Saturday, November 17, 2018

திருவண்ணாமலை தோன்றிய கதை - திருவண்ணாமலையின் சிறப்பு

பிரம்மாவுக்கும் பெருமாளுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்சை வந்தது.  அவர்கள் சிவனை அணுகினார்கள் அதற்கு அவர் நெருப்பு வடிவாக வானுக்கும் பூமிக்கும் ஆக உயர்ந்து நின்றார் தனது உச்சியை பிரம்மாவும் பாதத்தை பெருமாளும் பார்த்துவரும் படி அனுப்பினார். இருவராலும் அதை பார்க்க முடியவில்லை. உடனே பெருமாள் தனது தோல்வியை சிவனிடம் ஒப்புக்கொண்டார் . பிரம்மாவோ முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார் . பிரம்மா பொய் சொன்னதால் இனி மேல் பூமியில் பிரம்மாவுக்கு பூஜை கிடையாது என்ற தண்டனையை சிவன் வழங்கினார் . பின் சிவனின் நெருப்பு வடிவம் குளிர்ந்து உயர்ந்த மலையாக மாறியது . இதுவே அண்ணாமலை ஆனது .


சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி?

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை

திருவண்ணாமலை தோன்றிய கதை - திருவண்ணாமலையின் சிறப்பு,திருக்கார்த்திகை, கிரிவலம்

திருவண்ணாமலை என்ற  பெயர் வந்த காரணம் 

அண்ணா என்னும் சொல்லுக்கு நெருங்க முடியாது என்ற பொருளும் உண்டு.
நெருப்பு மலை என்பதால் யாராலும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது . கலியுகத்தில் நம்மீது அன்பு கொண்டு மலையாய் இருக்கும் சிவன் குளிர்ந்து நம்மை அருகில் வர அனுமதிக்கிறார் .

முன்பு அண்ணாமலையில் வசித்த அடியவர் ஒருவர் கணம்புல் கொண்டு திரியிட்டு ஸ்வாமிக்கு விளக்கேற்றி வந்தார் . அப்போது அந்த புல்லுக்கு தட்டுப்பாடு வந்தது . அப்போது தன்முடியையேதிரியாக்கி தீபம் ஏற்ற முயன்றார் . சிவனும் பார்வதியும் தோன்றி அவரை தடுத்து ஆட்கொண்டனர் . அவரது மனோதிடத்தை பாராட்டி நாயன்மார்களில் ஒருவராக்கினார் . கணம்புலால் விளக்குஏற்றியதால் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டார் .

ஒரு மலையே சிவனாக இருக்கிறது என்றால் அது தான் அண்ணாமலை . அண்ணா என்றால் மிக உயர்ந்த அண்ணாந்து பார்க்க வைக்கும் மலை அண்ணாமலை அத்துடன் மரியாதை நிமித்தம் ஆக திரு சேர்த்து திருவண்ணாமலை என்று அழைக்கப்பட்டது .
இங்கே அண்ணாமலையாரும் , அபிதகுஜாம்பிகை  என்னும் உண்ணாமுலை அம்மனும் அருள் தருகின்றனர் . இந்த அம்மன் எல்லா உயிர்களுக்கும் அருள் புரிபவள் உண்ணாமுலை எவ்வளவு கேட்டாலும் வரம் தரும் அன்னையெனப்பெயர் பெற்றாள் .

திருவண்ணாமலை சிறப்பு 

திருவண்ணாமலை 2748 அடி உயரம் கொண்டது இதை ஒரு முறை சுற்றி வர 14 கிலோமீட்டர் ஆகும் . 200 கோடி  ஆண்டுக்கு மேலாக  இந்த மலை உள்ளது . இந்த திருவண்ணாமலை ஒரு பழமையான , வரதையான மலையாகும் .

அண்ணாமலையார் கோவில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது . இங்கு 9 கோபுரங்கள் உள்ளது . இதனுடைய ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது .

திருக்கார்த்திகை அன்று இந்த திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம் ஆகும் . இது பெரும் விழாவும் ஆகும் .
இந்த தீபத்திற்கு பெயர் பரணி தீபம் .மலை  தீபம்  என்றும் கூறுகிறார்கள் .


கிரிவலம் செல்லும் முறை 

திருவண்ணாமலைக்கு கிரி வலம் செல்லும் பக்தர்கள் கிரிவல பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்க கோவில்கள்  உள்ளது .

முதலில் இந்திரலிங்கத்தை வணங்கிவிட்டு கிரி வலத்தை துவங்க வேண்டும் . தொடர்ந்து
2.அக்னி லிங்கம்
3. எம லிங்கம்
4. நிருதி லிங்கம்
5. வருண லிங்கம்
6. வாயு லிங்கம்
7. குபேர லிங்கம்
தரிசனம் முடித்து சுடுகாட்டில் உள்ள
8. ஈசான லிங்க கோவிலுக்கு செல்ல வேண்டும்
மனித வாழ்வின் முடிவு நிலை இறப்பு என்னும் தத்துவத்தை இங்கே உணர முடியும் .

இதன்பிறகு அண்ணாமலையாரை கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் . இதனுடன் கிரிவலமும் அண்ணாமலையார் தரிசனமும் நிறைவு பெரும் . இதுவே கிரிவலம் ஆகும் .

திருவண்ணாமலையின் விசேஷ நாட்கள் 

கிரிவலம் வர உகந்த நாட்கள் திருக்கார்த்திகை, பௌவர்ணமி கிரிவலம் , மஹாசிவராத்திரி , சனிப்பிரதோஷம் இந்த நாட்களில் கிரி வலம் செல்வது சிறப்பானது .

தீபாவளி பண்டிகையின் சிறப்பு

நவராத்திரி பண்டிகையின் சிறப்பு




Read More »

சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி?

ஸ்வாமியே சரணம் ஐயப்பா 


சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி , ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்ல 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க வேண்டும். இந்த நாளில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வரும் சனிக்கிழமைகளில் அல்லது உத்திர நக்ஷத்திரத்தன்று மாலை அணியலாம்.
இதை ஒரு கோவில் அர்ச்சகர் அல்லது குருஸ்வாமின் கையால் ருத்ராக்ஷ மாலை அல்லது துளசி மணி மாலை அணிய வேண்டும்.
அணிந்த பிறகு கோவிலை வலம் வந்து தேங்காய் உடைத்து அங்குள்ள ஸ்வாமிகளை வழிபட வேண்டும்.

18ஆம் படியேறி ஸ்வாமியை தரிசிக்க விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக 41 நாள் விரதமிருப்பது அவசியம் ஆகும் . 

விரதமிருக்கும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

41 நாட்களும் மாமிசம்  உணவு ( கறி,கோழி, மீன் போன்ற உணவுகள்) உண்ணக்கூடாது, மது அருந்த கூடாது, தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். பொய் பேச கூடாது . உறவினர் வீட்டில் மரணம் நேர்ந்தால் செல்ல கூடாது. மரணம் நேர்ந்த வீட்டுக்கு  செல்லும் படி ஆனால் மாலையை கழற்றுவதோடு மலைக்கு செல்லுவதை தவிர்த்துவிட வேண்டும் . காலை, மாலை தினமும் பூஜை செய்ய வேண்டும்.
பக்தர்கள் கட்டாயம் கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிய வேண்டும் . செருப்பு அணிய கூடாது. கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்த கூடாது.

இருமுடியில் வைக்கும் பொருட்களின் விவரம் 

1. மஞ்சள் பொடி -100 கிராம்
   (மஞ்சள் - மாதாவுக்காக )

2. சந்தன பாக்கெட்
3. குங்கும  பாக்கெட்
4. நெய் தேங்காய்  - 1
5. பசும் நெய்
6. விடலை தேங்காய் - 5
    (எரிமேலி, சபரி பீடம் , சரங்குத்தி, 18ஆம் படி, ஆழி)
7. சிறிய பன்னீர்  பாட்டில் - 1
8. கற்பூர பாக்கெட் - 1
9. பச்சரிசி
ஆகிய 9 பொருட்களும் திருமுடியில் இருக்க வேண்டும்.

மலைக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

வீட்டையோ, மனைவி , குழந்தைகளையோ , பெற்றோரையோ திரும்பி திரும்பி பார்க்காமல் செல்வது அவசியம். ஏன்யெனில்  பக்தர்கள் தங்களின் ஆன்மாவை முதலில் கடவுளிடம் சமர்ப்பிக்க  வேண்டும் . இந்த நடை முறை பக்தர்களால் அன்றும் இன்றும் பின்பற்ற படுகிறது.

சுவாமி ஐயப்பனுக்கு தை மாதம் முதல் தேதி அன்று மகர ஜோதி விழா நடை பெறுகிறது .

ஸ்வாமியே சரணம் ஐயப்பா 

   
Read More »

Saturday, November 3, 2018

தீபாவளி பண்டிகையின் சிறப்பு

தீபாவளி பண்டிகை புராணங்கள் இதிகாசங்களுடன் தொடர்புடையது.
தீபாவளி பண்டிகை புராணக்கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. பாகவதர்  கதையில் வரும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததாக வரும் கதையை   இப்பண்டிகையுடன் கூறுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் நரகாசுரன் உருவத்தை கொளுத்தி கிருஷ்னனை வணங்குகிறார்கள்.புராணக்கதைகள் பலவிதமாக நரகாசுரனை பற்றி கூறுகிறது.
Deepavali, Diwali festival,festival, story,Essay

நாராயணனுக்கும்  பூமகளுக்கும் பிறந்தவன் நரகாசுரன். இவன் அசுரருக்குரிய குணாதிசியங்களுடன் பிறந்தவன். ஆகவே அவனை வதம் செய்ய வேண்டி நாராயணன் வராக அவதாரம் எடுத்து அழித்தார்.நரகாசுரனும் தன்னை வேறு யாரும் அளிக்க கூடாது என்று வேண்டினான்.


பவுமன் கதை
மது கைடவர்கள் என்ற அரக்கர்கள் வேத சுவடிகளை கடலில் மறைத்து விட்டனர் விஷ்ணு வேதங்களை மீட்டுயெடுக்க சமுத்திரத்தில் மூழ்கினார் அப்போது விஷ்ணுவின் ஸ்பரிசத்தால் பூதேவி பவுமன் என்ற மகனை பெற்றார். அந்த மகன் பிரம்மாவை நோக்கித்தவம் இருந்து சாகாவரம் பெற்றான். என் தாயை தவிர வேறுயாரும் என்னை கொல்லக்கூடாது என்று வரம் பேற்றான்.

பவுமன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் துன்பம் கொடுத்தான் அவனை அழிக்க பூதேவியால் மட்டுமே முடியும் என்பதால் அவன் சக்தியும் வளர்ந்தது.  விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் அவனை அழிக்க முடிவு செய்தார் கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணன் அசுரனை அழிக்க புறப்பட்டார் தேரை சத்யபாமா ஓட்டினார்.  கிருஷ்ணன் மயங்கியது போல் விழுந்தார்.  சத்யபாமா அவரே ஆயுதம் ஏந்தி பவுமன் எனும் நரகாசுரனுடன்
போரிட்டு அவனை வதம் செய்தார்.  அப்போது அசுரன் தன் நினைவாக தீபம் ஏற்றி வெடிவெடித்து கொண்டாடவேண்டும் என்று கேட்டு கொண்டான். சத்யபாமாவும் அதற்கு வரம் அளித்தார்.  அதுவே மறுவி தீபாவளியாக கொண்டப்படுகிறது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதின் சிறப்பு 
தீபாவளி நாளன்று நீர்நிலைகளில் தண்ணீரிலும்  உடம்பில் தேக்கும் எண்ணெயில் லக்ஷ்மியும், சீயக்காயில் சரஸ்வதியும், நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூதேவியும் நிறைந்து இருப்பதாக ஐதீகம் . இருளை ஓட்டி ஒளியை பரப்புவதாக  ஐதீகம்.

நரக சதுர்த்தி ஐப்பசி மாதம் சதுர்த்தசி இரவில் தொடங்கி அடுத்த நாள் கொண்டாடுவது தான் தீபாவளி.  அமாவவாசைக்கு முந்தைய சதுர்தசியை
நரக சதுர்தசி என்று கூறுவார்கள். அமாவாசை நாளில் விடியும் முன் எழுந்து
எண்ணெய் குளியல் முடித்து சூரிய உதயத்தில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வணங்குதல். சதுர்த்தசி திதி க்கு அடுத்த நாள் அமாவாசையில் கேதாரகௌரி விரதம் இருந்து லட்சுமி பூஜை நடத்தி யமதர்ப்பணம் செய்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்வரும்( திரியோதசி)(சதுர்தசி )அமா வாசை (பிரதமை) ஆகிய 4 நாட்களும் தீபாவளியுடன் தொடர்புடைய நாட்களாகும் . இந்த நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றி இருளை அகற்றி ஒளியை பிரகாசிக்க செய்வதுதான் தீபாவளி பண்டிகை.

தீபாவளி அன்று எண்ணெய் குளியலுக்கு பிறகு தீபம் ஏற்றி வெடிவெடித்து பலபல பலகாரங்கள் செய்து நெய்வேத்தியம் செய்து எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி  பண்டிகை.

நவராத்திரி பண்டிகையின் சிறப்பு 






Read More »

Friday, October 12, 2018

அருமையான சமையல் குறிப்புகள்-1


1. பயத்தம்  பருப்பு  சுண்டல் செய்யும்போது, பருப்பை வாசனை வரும்படி வறுத்து விட்டுசெய்தால் சுண்டல் உதிரியாகவும், கம கம என்றும் இருக்கும்

2. கொண்டைக்கடலை ஊறவைத்த தண்ணிரில் வேகவைக்க கூடாது. புதிதாக தண்ணிர் ஊற்றி வேகவைக்க வேண்டும்

3. சுண்டல் செய்யும் போது சிறிது துருவிய இஞ்சியும், ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்தால் ஜீரண சக்திக்கு உதவும்

4. காய்ந்த பயறு வகைகளை 8 மணி நேரம் ஊறவைத்த பிறகு குக்கரில் 3 அல்லது 4 விசில் வைத்தால் நன்கு வெந்து விடும்.

5. 8 மணி நேரம் ஊறவைக்க முடியவில்லை என்றால். ஒரு ஹாட் பாக்ஸில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் பயறை போட்டு 3 மணி நேரம் உறவைக்கலாம். பிறகு குக்கரில் 3 அல்லது 4 விசில் வைத்தால் நன்கு வெந்து விடும்.



Read More »

Tuesday, October 9, 2018

கேஸ் விலை உயர்வு - அரசு மானியம் பெறுவது எப்படி?

கேஸ் விலை ரூபாய் 1000த்தை நெருங்கிகொண்டுஇருக்கிறது.இதை சமாளிப்பதற்கு அரசு மானியம் பெறுவது எப்படி? 

1. இணையத்தில் http://www.mylpg.in/index.aspx என்று கிளிக் செய்யவும் 

 2. உங்கள் கேஸ் கம்பெனியை  தேர்ந்துஎடுக்கவும்

How to get Gas Subsidy



3. கீழே உள்ளது போல் கிளிக் செய்யவும்

How to get Gas Subsidy


4. ஆதார் இணைத்துவிட்டால் அரசு மானியம் கிடைக்கும்

How to get Gas Subsidy




How to get Gas Subsidy

Read More »

Tuesday, October 2, 2018

நவராத்திரி பண்டிகையின் சிறப்பு

  நவராத்திரி பண்டிகையின் சிறப்பு 

ஆண்டின் துவக்கத்தில் அனைவரும் காலெண்டரை பார்ப்போம் ஆண்டின்
விடுமுறை நாட்களுக்காக . பண்டிகை நாட்கள் வார நாட்களில் வந்தால் கொண்டாட்டம் தான் ஏன்யெனில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடைக்கும் 😊. வார இறுதி சனி , ஞாயிறுகளில் பண்டிகை என்றால் தனி விடுமுறை கிடையாது 😟😟.



விஜயதசமி,ஸ்ரீதேவி,துர்க்கை,சரஸ்வதி,இலக்குமி,இச்சா சக்தி,ஞானசக்தி

ஒரு நாள் கொண்டாடப்படும் பண்டிகைகள் 

ஆங்கில வருட பிறப்பு  - இனிப்புடன் கொண்டாடுவோம்
பொங்கல் - இனிப்புடன் கொண்டாடுவோம்
மொஹரம் - இனிப்புடன் கொண்டாடுவோம்
காதலர் தினம் - இனிப்புடன் கொண்டாடுவோம்
தெலுங்கு வருட பிறப்பு - இனிப்புடன் கொண்டாடுவோம்
தமிழ் வருட பிறப்பு - இனிப்புடன் கொண்டாடுவோம்
புனித வெள்ளி - இனிப்புடன் கொண்டாடுவோம்
ரம்ஜான் - இனிப்புடன் கொண்டாடுவோம்
கோகுலாஷ்டமி - இனிப்புடன் கொண்டாடுவோம்
விநாயகர் சதுர்த்தி - இனிப்புடன் கொண்டாடுவோம்
தீபாவளி - இனிப்புடன் கொண்டாடுவோம்
கிறிஸ்மஸ் - இனிப்புடன் கொண்டாடுவோம்

நவராத்திரி பண்டிகையின் சிறப்பு 


நவம்  என்றால்  9 , ராத்திரி என்றால் இரவு .
 9 இரவும் 10 நாட்களும் கொண்டாப்படும் பண்டிகை நவராத்திரி.
நவராத்திரி 9 நாட்களும்  கொலு வைத்து கொண்டாடுவார்கள் கொலுவை  காண வருபவர்களுக்கு தினமும் ஒரு வகை சுண்டல் செய்து கொடுப்பார்கள்.
கொலுவில் மண்ணால் செய்த பொம்மைகளை வைத்து குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள், பாட்டு படுவார்கள்,  வழிபடுவார்கள்

நவராத்திரியின் நாட்கள்  1 - 3  - இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நவராத்திரியின் நாட்கள்  4 - 6  - ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்

நவராத்திரியின் நாட்கள்  7 - 9 - கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

துர்க்கைதேவி  8 நாட்கள் போரிட்டு 9ம் நாள் போரில்  மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

தீபாவளி பண்டிகையின் சிறப்பு 

சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி?





Read More »