Sunday, December 9, 2018

பிள்ளையார் நோன்பு தோன்றிய கதை

நகரத்தார் கொண்டாடும் பிள்ளையார் நோன்பு 

Pillaiyar, Vinayagar, Festival, Vinayagar Chathurthi, Ganesh, Lord story,

கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையில் இருந்து 21 நாள் விரதமிருந்து.
21ம் நாள் சஷ்டியும் , சதயமும் ஒன்று கூடும் அன்று ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் நோன்பு கொண்டப்படுகிறது .  இது ஒவ்வொரு நகரத்தார் இல்லங்களிலும் சிறப்பாக கொண்டப்படுகிறது . வெளிநாடுகளில் உள்ள நகரத்தாரும் சிறப்பாக கொண்டடுவார்கள் .

பிள்ளையார் நோன்புக்கு முதல் நாளில் ஆலங்காய் எடுப்பதற்கு மாவு தயார் செய்து வைப்பார்கள் . கருப்பட்டி பணியாரத்திற்கும் மாவு தயார் செய்து வைப்பார்கள் .

பிள்ளையார் நோன்பு அன்று விசேஷமாக பலகாரங்கள் செய்வார்கள். அவை
1. ஆலங்காய் - 21
2. கருப்பட்டி பணியாரம்  - 21
3. வெள்ளை பணியாரம்
4. உளுந்த வடை
5. பாசிப்பயறு சுண்டல்
ஆகிய பலகாரங்கள் செய்வார்கள்.

நோன்புக்காக
1. நெல்லுப் பொரி
2. எள்ளுப்பொரி
3. கம்புப் பொரி
4. சோளப் பொரி
5. அவல் பொரி
ஆகியவற்றை நோன்புக்காக பொரித்து வைத்து சாமி கும்பிடுவார்கள் .

இதன் விசேஷம் என்னவென்றால் 21 நாள் விரதமிருந்து . பிள்ளையார் நோன்பிற்கு பலகாரங்கள் செய்து விசேஷமாக கொண்டாடுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.இந்த ஆலங்காய் தான் பிள்ளையார் நோன்பின் விசேஷம்.

கொண்டாடும் முறை

நோன்பு அன்று பூஜை அறையில் நடுவீட்டு கோலம் போட்டு , விளக்கேற்றி , தேங்காய் , பழம் மற்றும்  கண்ணுப்பிள்ளை பூ  வையும்  , ஆவாரம் பூ வைத்து இணைத்து கட்டுவார்கள் . பிறகு புது துண்டு அல்லது வேஷ்டியிலிருந்து 21 நூல் எடுத்து வைத்து கொள்வார்கள். அதை ஆலங்காயில் வைத்து நெய் தடவி அதில் விளக்கேற்றி அதை வீட்டில் உள்ள பெரியவர் கிழக்கு பார்த்து அமர்ந்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுப்பார்கள் . அனைவரும் பெரியவர்களை வணங்கி பெற்று சாப்பிடவேண்டும் . இதற்கு " இலை எடுத்தல் " என்று பெயர் . இதுவே இந்த நோன்பின் சிறப்பாகும் . அந்தக்காலம் முதல் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது .

வீட்டில் செய்ய முடியாதவர்கள் செட்டிநாட்டு நகரமடத்தில் ( நகரவிடுதி) இலை எடுத்து கொள்வது இன்றும் வழக்கமாக உள்ளது .

சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி?
நவராத்திரி பண்டிகையின் சிறப்பு






No comments:

Post a Comment