ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்ல 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க வேண்டும். இந்த நாளில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வரும் சனிக்கிழமைகளில் அல்லது உத்திர நக்ஷத்திரத்தன்று மாலை அணியலாம்.
இதை ஒரு கோவில் அர்ச்சகர் அல்லது குருஸ்வாமின் கையால் ருத்ராக்ஷ மாலை அல்லது துளசி மணி மாலை அணிய வேண்டும்.
அணிந்த பிறகு கோவிலை வலம் வந்து தேங்காய் உடைத்து அங்குள்ள ஸ்வாமிகளை வழிபட வேண்டும்.
18ஆம் படியேறி ஸ்வாமியை தரிசிக்க விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக 41 நாள் விரதமிருப்பது அவசியம் ஆகும் .
விரதமிருக்கும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
41 நாட்களும் மாமிசம் உணவு ( கறி,கோழி, மீன் போன்ற உணவுகள்) உண்ணக்கூடாது, மது அருந்த கூடாது, தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். பொய் பேச கூடாது . உறவினர் வீட்டில் மரணம் நேர்ந்தால் செல்ல கூடாது. மரணம் நேர்ந்த வீட்டுக்கு செல்லும் படி ஆனால் மாலையை கழற்றுவதோடு மலைக்கு செல்லுவதை தவிர்த்துவிட வேண்டும் . காலை, மாலை தினமும் பூஜை செய்ய வேண்டும்.
பக்தர்கள் கட்டாயம் கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிய வேண்டும் . செருப்பு அணிய கூடாது. கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்த கூடாது.
இருமுடியில் வைக்கும் பொருட்களின் விவரம்
1. மஞ்சள் பொடி -100 கிராம்
(மஞ்சள் - மாதாவுக்காக )
2. சந்தன பாக்கெட்
3. குங்கும பாக்கெட்
4. நெய் தேங்காய் - 1
5. பசும் நெய்
6. விடலை தேங்காய் - 5
(எரிமேலி, சபரி பீடம் , சரங்குத்தி, 18ஆம் படி, ஆழி)
7. சிறிய பன்னீர் பாட்டில் - 1
8. கற்பூர பாக்கெட் - 1
9. பச்சரிசி
ஆகிய 9 பொருட்களும் திருமுடியில் இருக்க வேண்டும்.
மலைக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வீட்டையோ, மனைவி , குழந்தைகளையோ , பெற்றோரையோ திரும்பி திரும்பி பார்க்காமல் செல்வது அவசியம். ஏன்யெனில் பக்தர்கள் தங்களின் ஆன்மாவை முதலில் கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இந்த நடை முறை பக்தர்களால் அன்றும் இன்றும் பின்பற்ற படுகிறது.
சுவாமி ஐயப்பனுக்கு தை மாதம் முதல் தேதி அன்று மகர ஜோதி விழா நடை பெறுகிறது .
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்ல 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க வேண்டும். இந்த நாளில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வரும் சனிக்கிழமைகளில் அல்லது உத்திர நக்ஷத்திரத்தன்று மாலை அணியலாம்.
இதை ஒரு கோவில் அர்ச்சகர் அல்லது குருஸ்வாமின் கையால் ருத்ராக்ஷ மாலை அல்லது துளசி மணி மாலை அணிய வேண்டும்.
அணிந்த பிறகு கோவிலை வலம் வந்து தேங்காய் உடைத்து அங்குள்ள ஸ்வாமிகளை வழிபட வேண்டும்.
18ஆம் படியேறி ஸ்வாமியை தரிசிக்க விரும்புவோர் அனைவரும் கண்டிப்பாக 41 நாள் விரதமிருப்பது அவசியம் ஆகும் .
விரதமிருக்கும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
41 நாட்களும் மாமிசம் உணவு ( கறி,கோழி, மீன் போன்ற உணவுகள்) உண்ணக்கூடாது, மது அருந்த கூடாது, தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். பொய் பேச கூடாது . உறவினர் வீட்டில் மரணம் நேர்ந்தால் செல்ல கூடாது. மரணம் நேர்ந்த வீட்டுக்கு செல்லும் படி ஆனால் மாலையை கழற்றுவதோடு மலைக்கு செல்லுவதை தவிர்த்துவிட வேண்டும் . காலை, மாலை தினமும் பூஜை செய்ய வேண்டும்.
பக்தர்கள் கட்டாயம் கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிய வேண்டும் . செருப்பு அணிய கூடாது. கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்த கூடாது.
இருமுடியில் வைக்கும் பொருட்களின் விவரம்
1. மஞ்சள் பொடி -100 கிராம்
(மஞ்சள் - மாதாவுக்காக )
2. சந்தன பாக்கெட்
3. குங்கும பாக்கெட்
4. நெய் தேங்காய் - 1
5. பசும் நெய்
6. விடலை தேங்காய் - 5
(எரிமேலி, சபரி பீடம் , சரங்குத்தி, 18ஆம் படி, ஆழி)
7. சிறிய பன்னீர் பாட்டில் - 1
8. கற்பூர பாக்கெட் - 1
9. பச்சரிசி
ஆகிய 9 பொருட்களும் திருமுடியில் இருக்க வேண்டும்.
மலைக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வீட்டையோ, மனைவி , குழந்தைகளையோ , பெற்றோரையோ திரும்பி திரும்பி பார்க்காமல் செல்வது அவசியம். ஏன்யெனில் பக்தர்கள் தங்களின் ஆன்மாவை முதலில் கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இந்த நடை முறை பக்தர்களால் அன்றும் இன்றும் பின்பற்ற படுகிறது.
சுவாமி ஐயப்பனுக்கு தை மாதம் முதல் தேதி அன்று மகர ஜோதி விழா நடை பெறுகிறது .
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
No comments:
Post a Comment