Tuesday, October 2, 2018

நவராத்திரி பண்டிகையின் சிறப்பு

  நவராத்திரி பண்டிகையின் சிறப்பு 

ஆண்டின் துவக்கத்தில் அனைவரும் காலெண்டரை பார்ப்போம் ஆண்டின்
விடுமுறை நாட்களுக்காக . பண்டிகை நாட்கள் வார நாட்களில் வந்தால் கொண்டாட்டம் தான் ஏன்யெனில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடைக்கும் 😊. வார இறுதி சனி , ஞாயிறுகளில் பண்டிகை என்றால் தனி விடுமுறை கிடையாது 😟😟.



விஜயதசமி,ஸ்ரீதேவி,துர்க்கை,சரஸ்வதி,இலக்குமி,இச்சா சக்தி,ஞானசக்தி

ஒரு நாள் கொண்டாடப்படும் பண்டிகைகள் 

ஆங்கில வருட பிறப்பு  - இனிப்புடன் கொண்டாடுவோம்
பொங்கல் - இனிப்புடன் கொண்டாடுவோம்
மொஹரம் - இனிப்புடன் கொண்டாடுவோம்
காதலர் தினம் - இனிப்புடன் கொண்டாடுவோம்
தெலுங்கு வருட பிறப்பு - இனிப்புடன் கொண்டாடுவோம்
தமிழ் வருட பிறப்பு - இனிப்புடன் கொண்டாடுவோம்
புனித வெள்ளி - இனிப்புடன் கொண்டாடுவோம்
ரம்ஜான் - இனிப்புடன் கொண்டாடுவோம்
கோகுலாஷ்டமி - இனிப்புடன் கொண்டாடுவோம்
விநாயகர் சதுர்த்தி - இனிப்புடன் கொண்டாடுவோம்
தீபாவளி - இனிப்புடன் கொண்டாடுவோம்
கிறிஸ்மஸ் - இனிப்புடன் கொண்டாடுவோம்

நவராத்திரி பண்டிகையின் சிறப்பு 


நவம்  என்றால்  9 , ராத்திரி என்றால் இரவு .
 9 இரவும் 10 நாட்களும் கொண்டாப்படும் பண்டிகை நவராத்திரி.
நவராத்திரி 9 நாட்களும்  கொலு வைத்து கொண்டாடுவார்கள் கொலுவை  காண வருபவர்களுக்கு தினமும் ஒரு வகை சுண்டல் செய்து கொடுப்பார்கள்.
கொலுவில் மண்ணால் செய்த பொம்மைகளை வைத்து குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள், பாட்டு படுவார்கள்,  வழிபடுவார்கள்

நவராத்திரியின் நாட்கள்  1 - 3  - இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நவராத்திரியின் நாட்கள்  4 - 6  - ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்

நவராத்திரியின் நாட்கள்  7 - 9 - கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

துர்க்கைதேவி  8 நாட்கள் போரிட்டு 9ம் நாள் போரில்  மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

தீபாவளி பண்டிகையின் சிறப்பு 

சபரி மலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது எப்படி?





No comments:

Post a Comment