தீபாவளி பண்டிகை புராணங்கள் இதிகாசங்களுடன் தொடர்புடையது.
தீபாவளி பண்டிகை புராணக்கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. பாகவதர் கதையில் வரும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததாக வரும் கதையை இப்பண்டிகையுடன் கூறுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் நரகாசுரன் உருவத்தை கொளுத்தி கிருஷ்னனை வணங்குகிறார்கள்.புராணக்கதைகள் பலவிதமாக நரகாசுரனை பற்றி கூறுகிறது.
நாராயணனுக்கும் பூமகளுக்கும் பிறந்தவன் நரகாசுரன். இவன் அசுரருக்குரிய குணாதிசியங்களுடன் பிறந்தவன். ஆகவே அவனை வதம் செய்ய வேண்டி நாராயணன் வராக அவதாரம் எடுத்து அழித்தார்.நரகாசுரனும் தன்னை வேறு யாரும் அளிக்க கூடாது என்று வேண்டினான்.
பவுமன் கதை
மது கைடவர்கள் என்ற அரக்கர்கள் வேத சுவடிகளை கடலில் மறைத்து விட்டனர் விஷ்ணு வேதங்களை மீட்டுயெடுக்க சமுத்திரத்தில் மூழ்கினார் அப்போது விஷ்ணுவின் ஸ்பரிசத்தால் பூதேவி பவுமன் என்ற மகனை பெற்றார். அந்த மகன் பிரம்மாவை நோக்கித்தவம் இருந்து சாகாவரம் பெற்றான். என் தாயை தவிர வேறுயாரும் என்னை கொல்லக்கூடாது என்று வரம் பேற்றான்.
பவுமன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் துன்பம் கொடுத்தான் அவனை அழிக்க பூதேவியால் மட்டுமே முடியும் என்பதால் அவன் சக்தியும் வளர்ந்தது. விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் அவனை அழிக்க முடிவு செய்தார். கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணன் அசுரனை அழிக்க புறப்பட்டார் தேரை சத்யபாமா ஓட்டினார். கிருஷ்ணன் மயங்கியது போல் விழுந்தார். சத்யபாமா அவரே ஆயுதம் ஏந்தி பவுமன் எனும் நரகாசுரனுடன்
போரிட்டு அவனை வதம் செய்தார். அப்போது அசுரன் தன் நினைவாக தீபம் ஏற்றி வெடிவெடித்து கொண்டாடவேண்டும் என்று கேட்டு கொண்டான். சத்யபாமாவும் அதற்கு வரம் அளித்தார். அதுவே மறுவி தீபாவளியாக கொண்டப்படுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதின் சிறப்பு
தீபாவளி நாளன்று நீர்நிலைகளில் தண்ணீரிலும் உடம்பில் தேக்கும் எண்ணெயில் லக்ஷ்மியும், சீயக்காயில் சரஸ்வதியும், நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூதேவியும் நிறைந்து இருப்பதாக ஐதீகம் . இருளை ஓட்டி ஒளியை பரப்புவதாக ஐதீகம்.
நரக சதுர்த்தி ஐப்பசி மாதம் சதுர்த்தசி இரவில் தொடங்கி அடுத்த நாள் கொண்டாடுவது தான் தீபாவளி. அமாவவாசைக்கு முந்தைய சதுர்தசியை
நரக சதுர்தசி என்று கூறுவார்கள். அமாவாசை நாளில் விடியும் முன் எழுந்து
எண்ணெய் குளியல் முடித்து சூரிய உதயத்தில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வணங்குதல். சதுர்த்தசி திதி க்கு அடுத்த நாள் அமாவாசையில் கேதாரகௌரி விரதம் இருந்து லட்சுமி பூஜை நடத்தி யமதர்ப்பணம் செய்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்வரும்( திரியோதசி)(சதுர்தசி )அமா வாசை (பிரதமை) ஆகிய 4 நாட்களும் தீபாவளியுடன் தொடர்புடைய நாட்களாகும் . இந்த நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றி இருளை அகற்றி ஒளியை பிரகாசிக்க செய்வதுதான் தீபாவளி பண்டிகை.
தீபாவளி அன்று எண்ணெய் குளியலுக்கு பிறகு தீபம் ஏற்றி வெடிவெடித்து பலபல பலகாரங்கள் செய்து நெய்வேத்தியம் செய்து எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி பண்டிகை.
நவராத்திரி பண்டிகையின் சிறப்பு
தீபாவளி பண்டிகை புராணக்கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. பாகவதர் கதையில் வரும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததாக வரும் கதையை இப்பண்டிகையுடன் கூறுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் நரகாசுரன் உருவத்தை கொளுத்தி கிருஷ்னனை வணங்குகிறார்கள்.புராணக்கதைகள் பலவிதமாக நரகாசுரனை பற்றி கூறுகிறது.
பவுமன் கதை
மது கைடவர்கள் என்ற அரக்கர்கள் வேத சுவடிகளை கடலில் மறைத்து விட்டனர் விஷ்ணு வேதங்களை மீட்டுயெடுக்க சமுத்திரத்தில் மூழ்கினார் அப்போது விஷ்ணுவின் ஸ்பரிசத்தால் பூதேவி பவுமன் என்ற மகனை பெற்றார். அந்த மகன் பிரம்மாவை நோக்கித்தவம் இருந்து சாகாவரம் பெற்றான். என் தாயை தவிர வேறுயாரும் என்னை கொல்லக்கூடாது என்று வரம் பேற்றான்.
பவுமன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் துன்பம் கொடுத்தான் அவனை அழிக்க பூதேவியால் மட்டுமே முடியும் என்பதால் அவன் சக்தியும் வளர்ந்தது. விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் அவனை அழிக்க முடிவு செய்தார். கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணன் அசுரனை அழிக்க புறப்பட்டார் தேரை சத்யபாமா ஓட்டினார். கிருஷ்ணன் மயங்கியது போல் விழுந்தார். சத்யபாமா அவரே ஆயுதம் ஏந்தி பவுமன் எனும் நரகாசுரனுடன்
போரிட்டு அவனை வதம் செய்தார். அப்போது அசுரன் தன் நினைவாக தீபம் ஏற்றி வெடிவெடித்து கொண்டாடவேண்டும் என்று கேட்டு கொண்டான். சத்யபாமாவும் அதற்கு வரம் அளித்தார். அதுவே மறுவி தீபாவளியாக கொண்டப்படுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதின் சிறப்பு
தீபாவளி நாளன்று நீர்நிலைகளில் தண்ணீரிலும் உடம்பில் தேக்கும் எண்ணெயில் லக்ஷ்மியும், சீயக்காயில் சரஸ்வதியும், நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூதேவியும் நிறைந்து இருப்பதாக ஐதீகம் . இருளை ஓட்டி ஒளியை பரப்புவதாக ஐதீகம்.
நரக சதுர்த்தி ஐப்பசி மாதம் சதுர்த்தசி இரவில் தொடங்கி அடுத்த நாள் கொண்டாடுவது தான் தீபாவளி. அமாவவாசைக்கு முந்தைய சதுர்தசியை
நரக சதுர்தசி என்று கூறுவார்கள். அமாவாசை நாளில் விடியும் முன் எழுந்து
எண்ணெய் குளியல் முடித்து சூரிய உதயத்தில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வணங்குதல். சதுர்த்தசி திதி க்கு அடுத்த நாள் அமாவாசையில் கேதாரகௌரி விரதம் இருந்து லட்சுமி பூஜை நடத்தி யமதர்ப்பணம் செய்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்வரும்( திரியோதசி)(சதுர்தசி )அமா வாசை (பிரதமை) ஆகிய 4 நாட்களும் தீபாவளியுடன் தொடர்புடைய நாட்களாகும் . இந்த நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றி இருளை அகற்றி ஒளியை பிரகாசிக்க செய்வதுதான் தீபாவளி பண்டிகை.
தீபாவளி அன்று எண்ணெய் குளியலுக்கு பிறகு தீபம் ஏற்றி வெடிவெடித்து பலபல பலகாரங்கள் செய்து நெய்வேத்தியம் செய்து எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி பண்டிகை.
நவராத்திரி பண்டிகையின் சிறப்பு
No comments:
Post a Comment