1. பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது, பருப்பை வாசனை வரும்படி வறுத்து விட்டுசெய்தால் சுண்டல் உதிரியாகவும், கம கம என்றும் இருக்கும்
2. கொண்டைக்கடலை ஊறவைத்த தண்ணிரில் வேகவைக்க கூடாது. புதிதாக தண்ணிர் ஊற்றி வேகவைக்க வேண்டும்
3. சுண்டல் செய்யும் போது சிறிது துருவிய இஞ்சியும், ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்தால் ஜீரண சக்திக்கு உதவும்
4. காய்ந்த பயறு வகைகளை 8 மணி நேரம் ஊறவைத்த பிறகு குக்கரில் 3 அல்லது 4 விசில் வைத்தால் நன்கு வெந்து விடும்.
5. 8 மணி நேரம் ஊறவைக்க முடியவில்லை என்றால். ஒரு ஹாட் பாக்ஸில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் பயறை போட்டு 3 மணி நேரம் உறவைக்கலாம். பிறகு குக்கரில் 3 அல்லது 4 விசில் வைத்தால் நன்கு வெந்து விடும்.
No comments:
Post a Comment