அபிராமி அந்தாதி
பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
அபிராமி அந்தாதியில் எட்டாவது பாடலாக பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட என்ற இப்பாடலை அபிராமி பட்டர் இயற்றியுள்ளார்.
பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
பாடல் - 8
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
பொருள்
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் -
பாசமாம் தலைகளை எல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூரி நிறம் கொண்டவளே மகிடன் என்னும் அரசனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறம் கொண்டவளே.
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் -
பாசமாம் தலைகளை எல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூரி நிறம் கொண்டவளே மகிடன் என்னும் அரசனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறம் கொண்டவளே.
அந்தரி நீலி அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே -
என்றும் அழிவில்லாத இளம் கன்னியான தாயே பிரம்மதேவனின் கபாலத்தை தாங்கும் திருக்கரத்தை கொண்டவளாகிய அன்னையே ! அபிராமி அன்னையே ! தாமரை மலரை போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில்
என்றென்றும் பொருத்தி நிற்கின்றன என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே ! அன்னையே ! பேரழகு மிக்க தாயே ! உன்னை வணங்குகின்றோம் .
பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட இப்பாடலை பாடவும்.
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே -
என்றும் அழிவில்லாத இளம் கன்னியான தாயே பிரம்மதேவனின் கபாலத்தை தாங்கும் திருக்கரத்தை கொண்டவளாகிய அன்னையே ! அபிராமி அன்னையே ! தாமரை மலரை போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில்
என்றென்றும் பொருத்தி நிற்கின்றன என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே ! அன்னையே ! பேரழகு மிக்க தாயே ! உன்னை வணங்குகின்றோம் .
பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட இப்பாடலை பாடவும்.
தாயே நீயே துணை அம்மா
அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment