அபிராமி அந்தாதி
இல்வாழ்க்கையில் இன்பம் பெற
அபிராமி அந்தாதியில் பதினொன்னாவது பாடலாக இல்வாழ்க்கையில் இன்பம் பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
இல்வாழ்க்கையில் இன்பம் பெற
பாடல் - 11
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளதிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளதிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே
பொருள்
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய் -
ஆனந்த உருவாகிய அன்னையே! என் அறிவாகி நிரம்பிய அமுதம் போன்றவளாகிய அன்னையே!
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் -
வானம் இறுதியாய் உள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது
தான் அந்தமான சரணார விந்தம் தவளதிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே -
வெண்ணிற சாம்பல் படர்ந்த மயாணத்தை தம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் உள்ளது.
இல்வாழ்க்கையில் இன்பம் பெற இப்பாடலை பாடவும்
தாயே நீயே துணை அம்மா
அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment