அபிராமி அந்தாதி
மோட்ச சாதனம் பெற
அபிராமி அந்தாதியில் பத்தாவது பாடலாக மோட்ச சாதனம் பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
மோட்ச சாதனம் பெற
பாடல் - 10
நின்றும் இருந்தும் இடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
பொருள்
நின்றும் இருந்தும் இடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் -
நான் நின்றவாறும், இருந்தவாறும், படுத்தவாறும், நடந்தவாறும் தியானம்
செய்வதும் உன்னைத்தான் தாயே! என்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னுடைய திருவடி
தாமரையைத்தான் அன்னையே !
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் -
நான் நின்றவாறும், இருந்தவாறும், படுத்தவாறும், நடந்தவாறும் தியானம்
செய்வதும் உன்னைத்தான் தாயே! என்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னுடைய திருவடி
தாமரையைத்தான் அன்னையே !
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக்கூடிய அரும்பொருளாயும் சிவபெருமானின் திருவருள்
வடிவமுமாய் விளங்கும் உமை அன்னையே !
நான் என்றும் மறவாமல் வழிபடுவது உன்னுடைய திருவடி தாமரையைத்தான் அன்னையே! அன்னையே! போற்றி !
மோட்ச பதவி அடைய இப்பாடலை பாடவும்
மோட்ச சாதனம் பெற, மோட்ச பதவி அடைய,மோட்சம் மந்திரம்.
தாயே நீயே துணை அம்மா
அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment