அபிராமி அந்தாதி பாடல் 6 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

 

அபிராமி அந்தாதி 

மந்திர சித்தி பெற

அபிராமி அந்தாதியில் ஐந்தாவது பாடலாக மந்திர சித்தி பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

மந்திர சித்தி பெற 





பாடல் - 6

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம் பத்ததியே

பொருள்

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே     -  
செந்தூரத்தை போன்ற செவ்வண்ணத் திருமேனியை படைத்து இளம் உருவத்தில் எழுந்தருளில் இருக்கும் எங்கள் அன்னையே அடியேனுடைய தலையில் மேல் இருப்பது உன்னுடைய பொழிவுற்ற அழகிய பாதமாகிய தாமரை அடியேனுடைய மனதில் என்றுமே நிலையாய்
 
 
 
மன்னியது உன் திருமந்திரம்; சிந்தூர வண்ணப் பெண்ணே  - 
அடியேனுடைய மனதில் என்றுமே நிலையாய் இருப்பது உன்னுடைய தெய்வத்தன்மை பொருந்திய உன்னையே தியானித்து வாழும் அடியார்களுடன்
 
 
 
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம் பத்ததியே   - 
அடியார்களுடன் என்றும் முறையாக பாராயணம் செய்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது உன்னுடைய பெருமைகளை கூறும் மேலான நூல்களை ஆகும்



தாயே நீயே துணை அம்மா 
அன்னையே போற்றி 
தாயே போற்றி

Comments