அபிராமி அந்தாதி பாடல் 4 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

  

 

அபிராமி அந்தாதி 

உயர்பதவிகளை அடைய

அபிராமி அந்தாதியில் நான்காவது பாடலாக உயர்பதவிகளை அடைய பற்றி அபிராமி பட்டர் பாடல் இயற்றியுள்ளார்.

உயர்பதவிகளை அடைய





பாடல் - 4

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி 
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

பொருள்

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி     -  
மனிதர்களும் தேவர்களும் சாகாத வரம் பெற்ற முனிவர்களும் வந்து தலை வணங்கி வழிபடும் செம்மையான திருவடிகளை உடைய அபிராமி அன்னை தாயாரை

குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் - 
அகமும் புறமும் மென்மையாக உடைய அபிராமி அன்னை தாயாரே கொன்றை மலரை அணிந்த நீண்ட சடையின் மேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த - 
பணியை உண்டாக்கும் சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் யேந்தி அருளும் சிவபெருமானும்

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே - 
நீயும் யென் அறிவுடன் யேன் நாளும் மாறாது இணைந்திருக்க வேண்டுகிறேன்



தாயே நீயே துணை அம்மா 
அன்னையே போற்றி 
தாயே போற்றி



Comments