அபிராமி அந்தாதி
மனக்கவலை தீர
அபிராமி அந்தாதியில் ஐந்தாவது பாடலாக மனக்கவலை தீர அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
மனக்கவலை தீர
பாடல் - 5
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
பொருள்
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால் -
சேர்ந்து பொருந்திய திரிபுரத்தில் தலைவியானவளே அபிராமி அன்னையே செப்பை உவமையாக சொல்லும் இரண்டு தனங்களின் பாரம் தாங்காது.
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் -
வருந்தும் வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய இடையுடைய மனோன்மணி தாயே நீண்ட சடையை உடைய சிவபெருமான்.
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் -
அருந்திய ஆலகால விஷத்தை தன் கையால் கழுத்தளவு நிற்கச் செய்து அமுதம் போல் ஆக்கிய தாயே தாமரையின் மேல் அழகாக வீற்றிருந்து அருள் புரியும் பேரழகியே பிரகாசமான வடிவாகியவள.
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே -
அபிராமி அன்னையே உன் திருவடியை தால் பணிந்தேன்உன் திருவடி என் தலை மேல் உள்ளது.
தாயே நீயே துணை அம்மா
தாயே நீயே துணை அம்மா
அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment