அபிராமி அந்தாதி
குடும்பக்கவலையிலிருந்து விடுபட
அபிராமி அந்தாதியில் மூன்றாவது பாடலாக குடும்ப கவலையில் இருந்து விடுபடுவது பற்றி அபிராமி பட்டர் பாடல் இயற்றியுள்ளார்.
குடும்பக்கவலையிலிருந்து விடுபட
பாடல் - 3
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே
பொருள்
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு -
திருமகளாக இருக்கும் அன்னையே வேறு யாரும் அறியாத இயலாத ரகசியத்தை அடியேன் அறிந்தேன்
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப் -
அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன் உனது திருவடிகளை புகலிடமாக சேர்ந்தேன்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் -
நின்னுடைய அடியார்களின் பெருமை என்னாது பாவமிக்க மனம் காரணமாக குப்பர விளும் நரகலோகத்தில் தொடர்புடைய மனிதர்களை அஞ்சி விலகினேன்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே -
உன் அடியார்களின் பெருமை உணர்த்த தவறிய நெஞ்சத்தின் காரணமாக நரக லோகத்தில் தொடர்புடைய மனிதர்களை கண்டு அஞ்சி விலகிக் கொண்டேன்
இனி நீயே எனக்கு துணை அம்மா
தாயே நீயே துணை அம்மா
இனி நீயே எனக்கு துணை அம்மா
தாயே நீயே துணை அம்மா
அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment